16 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


16 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இலவச கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டு டோஸ் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 16 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், இதுவரை நடைபெற்ற முகாம்களில் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் இன்று இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 12.6 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story