2 பெண்கள் மீது தாக்குதல்


2 பெண்கள் மீது தாக்குதல்
x

2 பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன்(வயது 32). இவரது மனைவி வேம்பரசி(25). உலகநாதன் மற்றும் அவரது தம்பி தமிழரசன்(28) ஆகியோர் சம்பவத்தன்று வீட்டில் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வேம்பரசியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற வேம்பரசியின் தங்கை காவியாவை அரிவாள்மனையால் கீறியதோடு, கட்டையால் தாக்கியுள்ளனர். இது குறித்து வேம்பரசி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் உலகநாதன், தமிழரசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.


Next Story