வெவ்வேறு சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விவசாயி

லால்குடி அருகே சிறுமயங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 48). விவசாயி. வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் நடராஜன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சர்மிளா (22). இந்த நிலையில் சர்மிளா கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி இரவு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 7-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சர்மிளா திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப் பட்டார். இதையடுத்து அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சர்மிளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் சர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story