கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 2 வாலிபர்கள் காயம்


கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 2 வாலிபர்கள் காயம்
x

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 2 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.

கரூர்

வெள்ளியணை அருகே உள்ள காக்காவாடியை அடுத்த குள்ளம்பட்டியில் தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றை தூர்வாரும் பணியில், நேற்று அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், சரவணன், சாமிநாதன், ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தோஷ்குமார்(வயது 24), ஆனந்தராஜ்(24) ஆகிய இருவரும் கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கயிறு அறுந்தது. இதனால் கயிற்றின் வழியாக இறங்கிய சந்தோஷ்குமார், ஆனந்தராஜ் ஆகிய இருவரும் கிணற்றில் விழுந்து, காயமடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கரூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில், நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி, காயமடைந்த சந்தோஷ்குமார், ஆனந்தராஜ் ஆகியோரை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சிகிக்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story