கருவாடு மீன் ஆகாது; ஸ்டாலின் நினைப்பது ஏதும் நடக்காது- அமைச்சர் ஜெயக்குமார்


கருவாடு மீன் ஆகாது; ஸ்டாலின் நினைப்பது ஏதும் நடக்காது- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 11 Aug 2017 9:00 AM GMT (Updated: 11 Aug 2017 9:00 AM GMT)

கருவாடு மீன் ஆகாது; ஸ்டாலின் நினைப்பது ஏதும் நடக்காது- என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின்  , “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயகுமார் நிருபர் களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுபவர். அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார்.

கருவாடு மீனாகாது ஸ்டாலின் நினைத்தது எதுவும் நடக்காது
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story