தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு; கல்லூரி மாணவர்கள் போராட்டம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு; கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2018 3:26 AM GMT (Updated: 26 March 2018 3:26 AM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். #SterliteProtest

தூத்துக்குடி,

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வலுத்து 
உள்ளது.


இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இதற்காக வ.உ. சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் செய்து வருகின்றனர்.

Next Story