தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது


தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது
x
தினத்தந்தி 24 July 2018 5:30 AM GMT (Updated: 24 July 2018 5:30 AM GMT)

தமிழக மீனவர்கள் 7 பேர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி கைது செய்யப்பட்டு உள்ளனர். #TNFishermen #SriLankanNavy

புதுக்கோட்டை: 

இலங்கை கடற்படையினர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர் என கூறப்படுகிறது.  அவர்களின் 2 நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர்.

அந்த படகுகளை அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

கடந்த ஜூலை 8ந்தேதி தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி எல்லை கடந்து மீன்பிடித்தனர் என குற்றச்சாட்டு எழுப்பி மண்டபம் பகுதி அருகே 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

Next Story