ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு - அழகிரி பேட்டி
ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை. திருவாரூரில் எனக்கு எல்லோருமே ஆதரவு தருவார்கள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திருவாரூரில் போட்டியிடுவது பற்றி பார்க்கலாம்.
என்னுடைய விசுவாசிகளிடம் கேட்ட பிறகு திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. நான் தேர்தலில் போட்டியிட்டால் அனைத்துக் கட்சி தலைவர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்.
கருணாநிதியின் கொள்கைகளை என்றும் பின்பற்றுவேன், என்னை பாஜக இயக்குவதாக கூறுவது வதந்தி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story