தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்


தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்:  அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
x
தினத்தந்தி 30 Sep 2018 8:56 AM GMT (Updated: 30 Sep 2018 8:56 AM GMT)

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியார்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 3003 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட உள்ளதை, அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி கடைமடையான கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்படுவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story