பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு நல்லாட்சி வழங்கலாம் பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவல்


பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு நல்லாட்சி வழங்கலாம்  பன்னீர்செல்வம்  கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 3:34 PM GMT (Updated: 4 Oct 2018 3:34 PM GMT)

பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு நல்லாட்சி வழங்கலாம் என்று பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தந்தி டிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் பன்னீர்செல்வம். கடந்த வாரமும் தினகரனை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சி செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story