குருபெயர்ச்சி இனி கெட்ட நேரம் யாருக்கு என தெரியும் ஓபிஎஸ் மகன் பேட்டி
![குருபெயர்ச்சி இனி கெட்ட நேரம் யாருக்கு என தெரியும் ஓபிஎஸ் மகன் பேட்டி குருபெயர்ச்சி இனி கெட்ட நேரம் யாருக்கு என தெரியும் ஓபிஎஸ் மகன் பேட்டி](https://img.dailythanthi.com/Articles/2018/Oct/201810042313160446_Who-knows-the-bad-time-now-OpS-son_SECVPF.gif)
குருபெயர்ச்சி இனி நல்ல நேரம் கெட்ட நேரம் யாருக்கு என தெரியும் ஓபிஎஸ் மகன் கூறியுள்ளார்.
சென்னை,
2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் -
முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் பன்னீர்செல்வம் .கடந்த வாரமும் தினகரனை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சி செய்தார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
இந்தநிலையில், தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியது பற்றிய கேள்விக்கு , ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் செய்தியார்களிடம் கூறியதாவது:
குருபெயர்ச்சி நடந்துள்ளதால் இனி நல்ல நேரம் கெட்ட நேரம் யாருக்கு என தெரியும் என்றார்.
Related Tags :
Next Story