கட்சி தான் ஆட்சியை நடத்த வேண்டும், ஆனால் தற்போது ஆட்சி தான் கட்சியை நடத்தி வருகிறது - கே.சி.பழனிசாமி
![கட்சி தான் ஆட்சியை நடத்த வேண்டும், ஆனால் தற்போது ஆட்சி தான் கட்சியை நடத்தி வருகிறது - கே.சி.பழனிசாமி கட்சி தான் ஆட்சியை நடத்த வேண்டும், ஆனால் தற்போது ஆட்சி தான் கட்சியை நடத்தி வருகிறது - கே.சி.பழனிசாமி](https://img.dailythanthi.com/Articles/2018/Oct/201810312000253943_Now-the-regime-is-running-the-party-KCPalanisamy_SECVPF.gif)
கட்சி தான் ஆட்சியை நடத்த வேண்டும், ஆனால் தற்போது ஆட்சி தான் கட்சியை நடத்தி வருகிறது என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
கோவையில் கே.சி.பழனிசாமி செய்தியார்களிடம் கூறியதாவது:
அதிமுக சட்டவிதி திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் 30 நாளில் மேல்முறையீடு செய்ய உள்ளேன்.
வெற்றிவேல் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. கட்சி தான் ஆட்சியை நடத்த வேண்டும், ஆனால் தற்போது ஆட்சி தான் கட்சியை நடத்தி வருகிறது. அதிமுக தலைமை பொறுப்புக்கு தற்போது நிறைய போட்டி உள்ளது. தேர்தல் நடத்தினால் மட்டுமே கட்சி ஒன்றுப்பட்டு இருக்கும், பிளவு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story