வாக்கி டாக்கியில் கவிதை சொல்லும் காவல் ஆய்வாளர் பெண் அதிகாரி பாராட்டு


வாக்கி டாக்கியில் கவிதை சொல்லும் காவல் ஆய்வாளர் பெண் அதிகாரி பாராட்டு
x
தினத்தந்தி 25 Nov 2018 10:45 AM GMT (Updated: 25 Nov 2018 10:45 AM GMT)

வாக்கி டாக்கியில் கவிதை சொல்லும் காவல் ஆய்வாளரை பெண் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் இரவு நேர பணியின் போது காவல் ஆய்வாளர் ஒருவர் வாக்கி டாக்கியில் கவிதை சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 
உயர்நீதிமன்ற சட்டஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வருபவர், கனகேசன். இவர் இரவு பணியின் போது வாக்கி டாக்கி மூலம் சக காவலர்களுக்கு காவல்துறையின் பெருமை மற்றும் கம்பீரத்தை கவிதையாக சொல்கிறார். 

இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆய்வாளர் கனகேசனின்  முயற்சிக்கு, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ரவிலி பிரியா, பாராட்டு தெரிவித்துள்ளார். 

Next Story