துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பு


துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2018 11:57 AM GMT (Updated: 24 Dec 2018 11:57 AM GMT)

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 19-ந்தேதி நீக்கப்பட்டார்.

இதுபற்றி துணை முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்-அமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த 19-ந்தேதி வெளியிட்ட அறிக்கையில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும்,  கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும்,  கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ. ராஜா (பெரிய குளம் முன்னாள் நகர் மன்ற தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன் பிறப்புகள் யாரும்  இவருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஓ. ராஜா கட்சியில் உறுப்பினராக இணைந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அவர் நேரிலும், கடிதம் வழியேயும் வருத்தம் தெரிவித்த நிலையில் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

Next Story