முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் தகவல்


முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 4 Jan 2019 11:30 PM GMT (Updated: 4 Jan 2019 9:58 PM GMT)

மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை என்று சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன் (தூத்துக்குடி) பேசியதும், அமைச்சர் கருப்பணன் குறுக் கிட்டு அளித்த பதில் வருமாறு:-

மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

மறுசுழற்சி செய்ய முடியாத, கேடு விளைவிக்கக் கூடிய, மக்காத மற்றும் ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. 100 சதவீதம் பிளாஸ்டிக்கை தடை செய்யவில்லை.

மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகளுக்கு தடையில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பில் இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் பல மாற்றங்கள் வரும். அப்போது தெளிவுபடுத்தப்படும்.

பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தின்பண்டங்களுக்கான பிளாஸ்டிக் பாக் கெட்டுகளை முறைப்படுத்துவதற்கான திட்டமும் அரசிடம் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story