தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நெறிமுறைகள்


தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நெறிமுறைகள்
x
தினத்தந்தி 28 Jan 2019 5:14 PM GMT (Updated: 28 Jan 2019 5:14 PM GMT)

பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.

இந்நிலையில்,  இன்றோடு அவகாசம் முடிந்த நிலையில், நாளை காலை 9 மணி வரை அவகாசம் நீடித்து செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட நெறிமுறைகள்: 

அதில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள், அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு அது சார்ந்த கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

* மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முன்னுரிமை வழங்க வேண்டும்.

* அந்தந்த பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story