கனிமொழி எம்.பி. மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு


கனிமொழி எம்.பி. மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 May 2019 7:57 PM GMT (Updated: 25 May 2019 7:57 PM GMT)

திண்டிவனத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியபோது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை, 

திண்டிவனத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியபோது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஜூன் 4-ந் தேதி நேரில் ஆஜராக கனிமொழிக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கனிமொழி மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், கனிமொழி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு கனிமொழி ஆஜராக விலக்கு அளித்ததுடன், தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story