தி.மு.க. போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்


தி.மு.க. போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 24 Jun 2019 6:08 AM GMT (Updated: 24 Jun 2019 6:08 AM GMT)

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும் அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. அது மக்களிடையே எடுபடாது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம் என கூறினார்.

Next Story