தேசத்துரோக வழக்கு; வைகோவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு


தேசத்துரோக வழக்கு; வைகோவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 18 July 2019 9:59 AM GMT (Updated: 18 July 2019 9:59 AM GMT)

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 2009ல் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.  2009ம் ஆண்டில் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை அன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஓராண்டு  சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனை வழங்கியது தவறு என வைகோ தெரிவித்து உள்ளார்.  தண்டனையை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.  இதில், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என வைகோவுக்கு அறிவுறுத்தினர்.

மேல்முறையீடு மனு பற்றி ஆயிரம் விளக்கு பகுதி காவல் ஆய்வாளர் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளனர்.  இதனுடன், வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Next Story