குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்: அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
![குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்: அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்: அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு](https://img.dailythanthi.com/Articles/2019/Jul/201907310107517238_Family-control-made-The-woman-is-pregnant-again-On_SECVPF.gif)
குடும்பக்கட்டுப்பாடு செய்த பின் மீண்டும் கர்ப்பம் அடைந்ததால், நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி அந்த பெண் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு பகுதியை சேர்ந்த ஷிபா (வயது 30), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது 13 வயதில் திடீர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதற்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டில் எனக்கு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். 2-வது குழந்தை பிறந்த உடன், 2014-ம் ஆண்டில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்டேன்.
அதன்பின் தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மட்டும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு திடீரென மாதவிடாய் தடைபட்டது.
கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தபோது, என் வயிற்றில் 17 வார கரு வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டு, நானும் எனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம். குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும், கரு உருவாகி இருப்பது எனது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த மருத்துவர்களின் கவனக்குறைவுதான் காரணம்.
எனவே எனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
அரசு செலவில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் கண்காணிப்பில் எனக்கும், என் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன், நெல்லை கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு பகுதியை சேர்ந்த ஷிபா (வயது 30), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது 13 வயதில் திடீர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதற்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டில் எனக்கு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். 2-வது குழந்தை பிறந்த உடன், 2014-ம் ஆண்டில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்டேன்.
அதன்பின் தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மட்டும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு திடீரென மாதவிடாய் தடைபட்டது.
கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தபோது, என் வயிற்றில் 17 வார கரு வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டு, நானும் எனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம். குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும், கரு உருவாகி இருப்பது எனது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த மருத்துவர்களின் கவனக்குறைவுதான் காரணம்.
எனவே எனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
அரசு செலவில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் கண்காணிப்பில் எனக்கும், என் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன், நெல்லை கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story