குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2019 9:16 AM GMT (Updated: 31 Dec 2019 9:16 AM GMT)

குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வரும் பின்பற்றி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

கேரள சட்டமன்றப் பேரவையில் அம்மாநில முதல்-மந்திரி  பினராய் விஜயன் மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.

ஆகவே வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர் பழனிச்சாமி  தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story