செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 28 Jun 2020 4:20 AM GMT (Updated: 28 Jun 2020 4:20 AM GMT)

செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த சூழலில் செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல் ஆகிய நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,998 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story