கொரோனா தொற்று அதிகமாக உள்ள 14 மாவட்டங்களுக்கு அமைச்சர் குழுக்கள் நியமனம் சிறப்புக் கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் நடவடிக்கை


கொரோனா தொற்று அதிகமாக உள்ள 14 மாவட்டங்களுக்கு அமைச்சர் குழுக்கள் நியமனம் சிறப்புக் கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 May 2021 11:08 PM GMT (Updated: 9 May 2021 11:08 PM GMT)

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தவும், சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் 14 மாவட்டங்களுக்கு அமைச்சர் குழுக்களை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவும், கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், கீழ்க்காணும் அமைச்சர்கள், முதல்-அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி சென்னை மாவட்டம்- மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செங்கல்பட்டு மாவட்டம்- ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கோவை மாவட்டம்- உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம்- பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மதுரை மாவட்டம்- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தூத்துக்குடி மாவட்டம்- சமூகநலன், மகளிர் உரிமைத்துறை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்டம்- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, திருச்சி மாவட்டம்- நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருநெல்வேலி-திருப்பூர்

திருநெல்வேலி மாவட்டம்- கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈரோடு மாவட்டம்- வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, காஞ்சீபுரம் மாவட்டம்- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

திருப்பூர் மாவட்டம்- செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வேலூர் மாவட்டம்- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, விழுப்புரம் மாவட்டம்- உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரை கொண்ட அமைச்சர் குழுக்கள் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கண்ட 14 மாவட்டங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story