மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 May 2021 6:00 AM GMT (Updated: 22 May 2021 6:06 AM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. 

இந்நிலையில்,சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் மொத்தம் 40 மாற்றுத்திறனாளிகள் முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி செலுத்த முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று செலுத்தப்படும் என்றும் இதற்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story