2 வது நாளாக 50-க்கு கீழே சரிந்த கொரோனா பாதிப்பு


2 வது நாளாக 50-க்கு கீழே சரிந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2021 1:35 PM GMT (Updated: 4 Oct 2021 1:35 PM GMT)

புதுச்சேரியில் 2வது நாளாக 50க்கு கீழே கொரோனா பாதிப்பு சரிந்தது.

புதுச்சேரி
புதுச்சேரியில் 2-வது நாளாக 50-க்கு கீழே கொரோனா பாதிப்பு சரிந்தது.

42 பேருக்கு தொற்று

புதுவையில்  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 832 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 42 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 106 பேர், வீடுகளில் 548 பேர் என 654 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 96 பேர் குணமடைந்தனர்.
அதே நேரத்தில் ஏனாமில் 75 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,842 ஆக உயர்ந்தது. 

50-க்கு கீழ்...

புதுவையில் நேற்று  கொரோனா பாதிப்பு 32 ஆக இருந்தது.   இன்று  42 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக தொற்று பாதிப்பு 50 கீழ் சரிந்தது. மாநிலத்தில் தொற்று பரவல் 1.10 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 98.03 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் முதல்கட்ட தடுப்பூசியை 682 பேரும், 2-வது கட்ட தடுப்பூசியை 1,645 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 10 லட்சத்து 22 ஆயிரத்து 249 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story