அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: அவசர கால திட்டம் தயாரிக்க வேண்டும்


அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: அவசர கால திட்டம் தயாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:14 PM GMT (Updated: 12 Oct 2021 7:14 PM GMT)

அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: அவசர கால திட்டம் தயாரிக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. மின்உற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை என்று மத்திய-மாநில அரசுகள் கூறி வந்தாலும் கூட, மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை மந்திரிகளை அழைத்து உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தியிருப்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 60,000 டன் நிலக்கரி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர், அதனால் தமிழகத்தில் ஒரு வினாடி கூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும் கூட, கள நிலைமையை கருத்தில் கொண்டு, நிலக்கரித் தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான திட்டத்தை வகுத்து தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.எனவே, கள நிலைமையை உணர்ந்து கொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தை தயாரித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story