காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் உள்பட 3 பேர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் உள்பட 3 பேர் கைது
x

காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

கங்கைகொண்டான்:

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் நேற்று கன்னியாகுமரி- மதுரை ரோட்டில் நெல்லை அருகே கங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் நெல்லை தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த மாரியப்பன் (வயது 38), ரகுபதி (21) என்பதும் அவர்கள் காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் தென்காசி பறையடி தெருவில் 40 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்த அதே பகுதியை சேர்ந்த சித்திக் அலி (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story