தாய் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு


தாய் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
x

தாய் வீட்டில் 30 பவுன் நகை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்


வத்திராயிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரதாய் (வயது 50). இவரது மகள் நிவேதா. இவர் கடந்த மே மாதம் தாய்க்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கூமாபட்டி ராமசாமிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் சுந்தரதாய் கடந்த ஜூன் மாதம் வீட்டு பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ. 4 லட்சம் ஆகியவற்றை நிவேதா எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரதாய் கேட்டபோது நிவேதாவுக்கு ஆதரவாக அவரது கணவர் பிரபாகரன், அவரது பெற்றோர் ரவி மற்றும் முனீஸ்வரி ஆகியோர் சுந்தரதாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுந்தரதாய் மேற்படி 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி வத்திராயிருப்பு போலீசார், நிவேதா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story