பண்ணைக்குள் மழைநீர் புகுந்து 50 முயல்கள் சாவு


பண்ணைக்குள் மழைநீர் புகுந்து 50 முயல்கள் சாவு
x

பண்ணைக்குள் மழைநீர் புகுந்து 50 முயல்கள் உயிரிழந்தன.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சத்யா. பட்டதாரியான இவர் கணவனால் கைவிடப்பட்டு தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் சத்யா, அரசு மானியம் மற்றும் பல உதவியுடன் கடந்த சில ஆண்டுகளாக முயல்பண்ணை அமைத்து நடத்தி வருகிறார். சுமார் 300-க்கும் மேற்பட்ட முயல்களை அவர் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் முயல் பண்ணைக்குள் திடீரென மழைநீர் புகுந்தது. பண்ணை முழுவதையும் மழைநீர் சூழ்ந்ததில் தண்ணீரில் மூழ்கி 50-க்கும் மேற்பட்ட முயல்கள் உயிரிழந்தன. இதனால் தனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என சத்யா கோரிக்கை விடுத்துள்ளார்.



Next Story