பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
x
திருப்பூர்


திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போதுஅங்கு பணம் வைத்து சூதாடிய கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த முத்து மாயர் (வயது 58) உள்பட 8 பேர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.3,800-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story