திடீரென பற்றி எரிந்த பேருந்து டயர்.. அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள் - கொடைக்கானலில் பரபரப்பு


திடீரென பற்றி எரிந்த பேருந்து டயர்.. அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள் - கொடைக்கானலில் பரபரப்பு
x

கொடைக்கானல் அருகே ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் பின்பக்க டயர், திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து வத்தலகுண்டு நோக்கி 20 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றுகொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பக்க டயர்கள் எரிவதை பயணிகள் கண்டனர்.

இதையடுத்து உடனடியாக நடத்துநரிடம் பயணிகள் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக பேருந்து ஓரங்கப்பட்டதும், பேருந்தில் இருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக வந்த வீரர்கள், தீயை அணைத்தனர். பின்பக்க இணைப்பு அச்சு முறிந்ததன் காரணமாக, சக்கரத்தில் நெருப்பு பற்றியதாக தகவல் வெளியான நிலையில், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story