முதியவரை தாக்கியவர் மீது வழக்கு


முதியவரை தாக்கியவர் மீது வழக்கு
x

முதியவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

காட்டுப்புத்தூர் அருகே உள்ள உடையாளகுளம்புத்தூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி(வயது 60). இவரும், இவரது நண்பரும் சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த பழனியாண்டி மகன் பாலு (வயது 35), குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதை வீராசாமி தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த பாலு, வீராசாமியை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த வீராசாமி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பாலு மீது காட்டுப்புத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story