வீட்டில் தேசியக்கொடியை ஏற்றிய கலெக்டர்


வீட்டில் தேசியக்கொடியை ஏற்றிய கலெக்டர்
x

வீட்டில் கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றினார்.

கரூர்

இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தனது இல்லத்தில் நேற்று தேசியக்கொடியினை ஏற்றி வைத்து குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றி வைக்கும் நிகழ்வு இனிதே தொடங்கி இருக்கின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நமது நாட்டின் சுதந்திர தின விழாவினை மகிழ்ச்சியுடனும் மிகுந்த ஆரவாரத்துடனும் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கரூர் மாவட்டம் முழுவதும் 3.30 லட்சத்திற்கு மேல் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதை தவிர ஒவ்வொரு அரசு அலுவலகங்கள், அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள், அனைத்து வீடுகளிலும் கிட்டத்தட்ட 3.50 லட்சம் தேசியக்கொடியினை ஏற்றி பறக்க விட உள்ளனர். அதற்கு தேவையான தேசியக்கொடி நமது மாவட்டத்தை சேர்ந்த 500 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தேசியக்கொடியை எப்படி ஏற்ற வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.


Next Story