செம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி


செம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 18 Jun 2023 9:00 PM GMT (Updated: 19 Jun 2023 6:31 AM GMT)

செம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதலனை கல்லூரி மாணவி கரம்பிடித்தார்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 24). இவரும், அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியான லத்தியா (19) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு லத்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று லத்தியாவின் பெற்றோர் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் லத்தியாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கார்த்திக்ராஜாவும், லத்தியாவும் நேற்று முன்தினம் பாதுகாப்பு கேட்டு செம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் காதலர்கள் 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழுமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story