திருமங்கலம் அருகே வேகத்தடையில் ஏறிய மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


திருமங்கலம் அருகே  வேகத்தடையில் ஏறிய மோட்டார்  சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x

திருமங்கலம் அருகே வேகத்தடையில் ஏறிய மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

திருமங்கலம்

மதுரை சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கையா. லாரி டிரைவர். இவருடைய மனைவி சிவகாமி கவிதா (வயது 38).

நேற்று முன்தினம் சிவகாமி கவிதா தனது அக்காள் மகன் கபிலனுடன் மோட்டார்சைக்கிளில் டி.கல்லுப்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது கருப்பு கோவில் அருகே இருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது. அப்போது, பின்னால் அமர்ந்திருந்த சிவகாமி கவிதா மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சிவகாமி கவிதா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story