மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு


மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு
x

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் பிணமாக கிடந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 57), கூலித் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் பரதராமியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகு என்பது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகு எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story