புஞ்சைபுளியம்பட்டியில் கார் மீது பஸ் மோதல்- 3 பேர் உயிர் தப்பினர்


புஞ்சைபுளியம்பட்டியில் கார் மீது பஸ் மோதல்- 3 பேர் உயிர் தப்பினர்
x

புஞ்சைபுளியம்பட்டியில் கார் மீது பஸ் மோதல்- 3 பேர் உயிர் தப்பினர்

ஈரோடு

புஞ்சை புளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் முகமது அனிஷ் (வயது 30). சத்தி மெயின் ரோட்டில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவருடன் வேலை பார்ப்பவர்கள் சலீம் (25), பசீர் (28). 3 பேரும் முகமது அனிஷ் வீட்டுக்கு நேற்று காரில் சென்றுகொண்டு இருந்தார்கள். காரை முகமது அனிஷ் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் தலைகுப்புற கவிழ்ந்த கார் பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்டது. விபத்து ஏற்பட்டதும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காரின் பின்னால் உட்கார்ந்து வந்த சலீம், பசீர் ஆகியோரை கண்ணாடியை உடைத்து மீட்டனர். முகமது அனிஷை மீட்க முடியவில்லை.

இதனால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பஸ்சில் இருந்து காரை இழுத்து முகமது அனிஷை மீட்டார்கள். இந்த விபத்தில் 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story