தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:47 PM GMT)

தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று வழங்கினார்.

கிறிஸ்துமஸ் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தூத்துக்குடி கனி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னாள் நகரசபை தலைவர் ரா.ஹென்றி தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு, ஆயிரம் பேருக்கு சில்வர் குடம், வேட்டி, சேலை மற்றும் அரிசி பை ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பாதிரியார் எட்வின் டேனியல் ஜெபம் செய்தார். பிஷப் ஸ்டீபன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ரா.சுதாகர், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, வக்கீல் சுகந்தன்ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story