இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் - எடப்பாடி பழனிசாமி


இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் - எடப்பாடி பழனிசாமி
x

அதிமுக சார்பில் யாரை வேட்பாளரை முடிவு செய்வது என்பது தொடர்பாக ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளரை முடிவு செய்வது என்பது தொடர்பாக ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த 3 பேரில் யார் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கோணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய ஆலோசனைக்குப் பின் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story