வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது


வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது
x

வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி அருகே உள்ள பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது26). இவரும் தொண்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணும் 4 வருடங் களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை அறிந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். இதனை விஜய் தட்டிக் கேட்ட போது ஆத்திரமடைந்த பெண்ணி கணவர் அரிவாளால் விஜய்யை வெட்டியுள்ளார். இதில் படு காயம் அடைந்த விஜய் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story