ஈரோட்டில்16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
![ஈரோட்டில்16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது ஈரோட்டில்16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/19/1458942-child-marriage1.webp)
ஈரோட்டில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோட்டில் 16 வயது சிறுமிைய திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சொகுசு பஸ் கிளீனர்
சேலம் மாவட்டம் ஓமலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் வெற்றிவேல் (வயது 29). இவர் தனியார் சொகுசு பஸ்சில் கிளீனராக பணியாற்றி வருகிறார். வெற்றிவேல், ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதையறிந்த சைல்டு லைன் அமைப்பினர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி தலைமையிலான போலீசார், ஈரோட்டில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். முன்னதாக போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து வெற்றிவேல் தலைமறைவாகி விட்டார்.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கட்டாயப்படுத்தி பெற்றோர் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெற்றிவேலை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வெற்றிவேலை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் பெற்றோர், உறவினர் 3 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி கூறினார்.