பனை மரத்தில் கார் மோதி விபத்து; 5 பேர் படுகாயம்


பனை மரத்தில் கார் மோதி விபத்து; 5 பேர் படுகாயம்
x

பாப்பாக்குடி அருகே பனை மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே, பனை மரத்தில் கார் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரில் சென்றனர்

நெல்லையை அடுத்த பேட்டை காந்திமதி நகரைச்சேர்ந்த பரமசிவம் (வயது 81) என்பவருடைய மகன் சுப்பிரமணியன் (40). இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (36), மகள் பவித்ரா (13), மகன் மாதேஸ்வரன் (11) மற்றும் தந்தையுடன் நேற்று குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை பரமசிவம் ஓட்டினார். பாப்பாக்குடி அருகே செங்குளம்- இடைகால் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓடைப்பாலம் அருகில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

பனை மரத்தில் மோதியது

இதனால் சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்ததும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story