பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை


பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
x

பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் கால்நடைகள் வியாபாரம் நடந்தது.

வேலூர்

பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் கால்நடைகள் வியாபாரம் நடந்தது.

வாரச்சந்தை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கறவை மாடுகள், காளைகள், ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால் இங்கு சாதாரணமாக வாரத்திற்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கால்நடை விற்பனை மட்டுமின்றி, கால்நடை தொடர்பான பொருட்கள், காய்கறிகள் விற்பனை நடைபெறும். இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை நடைபெற்றது.

ரூ.2 கோடிக்கு வியாபாரம்

சந்தையில் கடந்த வாரத்தைவிட நேற்று அதிக அளவிலான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்க ஆர்வம் காட்டினர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொய்கைவாரச் சந்தை நடத்தும் ஏலதாரர்களில் ஒருவரிடம் கேட்டதற்கு இந்த வாரம் கால்நடைகளின் வரத்து அதிகமாகவே இருந்தன. விற்பனைக்காக கொண்டு வரப்படும் விவசாயிகளிடத்தில் சந்தையில் வியாபாரம் நடத்துவதற்காக அவர்களிடம் சுங்க வரி வசூல் செய்வோம். வாரத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை வசூல் ஆகும். ஆனால் இந்த வாரம் சுமார் ரூ.2 லட்சம் வரி வசூல் ஆனது. ரூ.2 கோடிக்குமேல் வியாபாரம் நடந்ததாகவும் கூறினார்.


Next Story