9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்


9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்
x

மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.


Next Story