உலக புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம்...!


உலக புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம்...!
x

உலக புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை,


திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில்உலக புகழ் பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.


இந்த ஆண்டு இந்த விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், 9-ம் திருவிழாவான இன்று கற்பக விநாயகர் கோயிவில் விநாயகர் சதுர்த்தி தேரோட்ட விழா இசை வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.


பெரிய தேரில் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளியுள்ளனர். கற்பகவிநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்தும், சண்டிகேசுவரர் தேரை முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.


நாளை (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story