நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது


நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது
x

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

தற்பொழுது தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் 92 காலி பணியிடங்கள் கொண்ட குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineeclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ பதிவு செய்ய வேண்டும். இல்லை எனில் நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story