காவல்நிலைய மரணங்கள், துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு - தமிழக அரசு அறிவிப்பு


காவல்நிலைய மரணங்கள், துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
x

காவல்நிலைய மரணங்கள் தொடர்பான இழப்பீட்டு தொகையை உயர்த்தி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், காவல்நிலைய மரணங்கள், துப்பாக்கிச்சூடு மரணங்கள், காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுகள், காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கான இழப்பீடு 5 லட்சம் ரூபாயில் இருந்து 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல், காவலர்களால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



Next Story