ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,551-க்கு விலை போனது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,551-க்கு விலை போனது.

பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடந்தது.

பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 1,958 லாட் பருத்தியை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.சராசரியாக 3000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ரூ.2 கோடிக்கு விற்பனை

இந்த ஏலத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,551-க்கும் குறைந்தபட்சமாக ரூ.7,199-க்கும், சராசரியாக ரூ.7,309-க்கும் விலைபோனது.


Next Story