விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் சாவு


விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் சாவு
x

பாலக்கோடு அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் இறந்தான்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே சித்திரப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். தொழிலாளி. இவரது மகன் பிரியதர்ஷன் (வயது11). இவன் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 26-ந்தேதி பள்ளி முடிந்து மாணவன் வீடு திரும்பினான். அப்போது பெற்றோரிடம் விஷபூச்சி கடித்ததாகவும், உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். இதையடுத்து மாணவனை பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story