மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை,

சிங்காரப்பேட்டை அருகே நார்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது55). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் குரங்குகல்மேடு என்னும் இடத்தில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அன்பழகன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அன்பழகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story